Thursday 22 March 2012

பட்டு வளர்ப்பு


வளர்ப்பு முறை

பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும்பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்கஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி  70-80நாட்கள் ஆகும்.
·       மல்பெரி சாகுபடி
மல்பெரி ரகம்
வி-மற்றும் எஸ்-36 ஆகிய இரு ரகங்களும் அதிக மகசூலைக் கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இரகங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளரஇந்த இரு ரகங்களும் நல்ல சத்தான இலைகளை கொடுக்கின்றன. இவ்விரு ரகங்களைப்பற்றி விவரமாகப் பார்ப்போம்.
  எஸ்-36 (S-36) ரகம்
  • இலைகள் இதயவடிவில், தடிமனாகவும்இளம்பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
  • இலைகள் அதிகமான ஈரப்பதத்தையும், சத்துக்களையும் பெற்றிருக்கும்.
  • ஒரு ஏக்கரில், வருடத்திற்கு 20,000 - 24,000 கிலோ தரமான இலைகள்உற்பத்தியாகும்.
வி-1 (V-1) ரகம்
  • இந்த ரகம் 1997ல் மைசூரில் உள்ள பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பிரபலமான ரகம் ஆகும்.
  • இலைகள் நீள்வட்ட வடிவமாகவும்அகலமாகவும்அடர்பச்சையாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும்.
  • ஒரு ஏக்கருக்குஒரு வருடத்தில் 20,000 - 24,000 கிலோ இலை உற்பத்திகிடைக்கும். 
மல்பரி நடவு முறை
  • இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால்தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியை காட்டிலும், (90 + 150) செ.மீ X 60செ.மீ இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.
  • இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும்அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும்,சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.
  • ஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.
  • சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால்ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்
  • தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும். 
இரசாயன உரம் மற்றும் தொழு உரமிடுதல்
  • 20 டன் தொழுஉரத்தைசமமாக இரண்டாகப் பிரித்து இருமுறை இடவேண்டும்.
  • ஒரு வருடத்திற்குவிரகத்திற்கு 350:140:140 கிலோ/எக்டர் என்ற அளவிலும் எஸ்36 இரகத்திற்கு 300:130:120 கிலோ/எக்டர் என்ற அளவிலும் தழைமணி மற்றும் சாம்பல் சத்தை சமமாகப் பிரித்து 5 முறை இடவேண்டும்.
நீர் மேலாண்மை
  • 80-120 மி.மீ அளவிற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நீர் தட்டுப்பாடு ஏற்படும் போதுவிவசாயிகள் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பின்பற்றி 40 சதவீதம் நீரைச் சேமிக்க முடியும். 

பட்டுப்புழு வளர்ப்பு
1. பட்டுப்புழு கலப்பினங்கள் 
இரு சந்ததி கலப்பினங்களாகிய CSR2 X CSRமற்றும் இருவழிக்கரு ஒட்டாகிய கிருஷ்ணராஜாவும் பரிந்துரை செய்யப்படுகிறது.
2. இளம்புழு வளர்ப்பு
முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள்,நோய்களை உண்டாக்கும் என்பதால்அவற்றை சிறந்தமுறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால்தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும்வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 
3. வளர்ந்த புழு வளர்ப்பு
வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும்அதிகமாகவும் இலைகளை உண்ணும். பட்டுவளர்ப்பிற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிகள் கீழ்க்கண்டவாறுஉள்ளன.
4.வளர்ப்பு மனை
மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-280சி வெப்பமும் 70-80%ஈரப்பதமும் தேவை. நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு மனையின் கூறை அமைக்கும்போதும்கட்டிடத்தை வடிவமைக்கும் போதும்குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளை சேமிப்பதற்கும்இளம்புழு வளர்ப்பிற்கும்வளர்ந்த புழு வளர்ப்பிற்கும்,தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம்செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏறுறவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும். 
பட்டுபுழு வளர்ப்பின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 400 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).
5.வளர்ப்புச் சாதனங்கள்
அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின்வெப்பத்தைக் குறைக்கவும்புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம். 
  100 நோயற்ற முட்டைத் தொகுதிகளுக்கு (50000 புழுக்கள்) ஏற்ற குறைந்தபட்ச தேவைகள் 
எண்
சாதனம்
அளவு
1.
தண்டு-வளர்ப்புத் தட்டு (40' x 5’) 5 அடுக்கு
1
2.
கூடு கட்டும் தட்டி
35
3.
விசைத் தெளிப்பான்
1
4.
ஈரப்பதம் ஏற்றி
1


6. கிருமி நீக்கம் செய்தல்
வளர்ப்பு மனையையும்வளர்ப்புச் சாதனங்களையும் இருமுறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் 5% பிளீச்சிங்பவுடரிலும்அடுத்து வளர்ப்பு தொடங்கும் 2 தினங்களுக்கு முன் 2.5%சேனிடெக் கொண்டும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  கிருமி நீக்கம் செய்யப் பின்பற்ற வேண்டிய அட்டவணை 
நாள்
வேலையைஅட்டவணைப்படுத்துதல்
வேலையின்விபரம்
புழு வளர்ப்பு முடிந்தவுடன்
1
நோய்வாய்ப்பட்ட புழுக்கள்உருகிய மற்றும் கழிவான கூடுகளைச் சேகரித்து எரித்தல்

2
கூடு கட்டு தட்டிகளில் உள்ள பட்டு கூட்டின்வெளியுறையை எரித்தும்புகை பரப்பியும் கிருமி நீக்கம் செய்யவேண்டும்

3
வளர்ப்பு மனை மற்றும் சாதனங்களை முதல் முறைகிருமி நீக்கம் செய்தல்
புழு வளர்ப்பு தொடங்கும்5நாட்களுக்குமுன்பு
4
வளர்ப்பு சாதனங்களை சுத்தம் செய்துகழுவுதல்

5
சூரிய ஒளியில் சாதனங்களைக் காயவைக்கவேண்டும்
புழு வளர்ப்பு தொடங்கும்4நாட்களுக்குமுன்பு
6
0.3% சுண்ணாம்பு கொண்டு கிருமி நீக்கம் செய்தல்
புழு வளர்ப்பு தொடங்கும்3நாட்களுக்குமுன்பு
7
இரண்டாம் முறையாக வளர்ப்பு மனையையும்,சாதனங்களையும் கிருமி நீக்கம் செய்தல்
புழு வளர்ப்பு தொடங்கும்2நாட்களுக்குமுன்பு
8
வளர்ப்பு மனையின் முன்பும்,வாயிலிலும் கிருமி நாசினி அடித்தல்

9
காற்றோட்டம் உருவாக்க ஜன்னல்களைத் திறந்து வைத்தல்
தொடங்கும்நாளுக்கு முன்பு
10
பட்டுபுழு வளர்ப்புக்குதயாராதல்

7. தண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி
இம்முறையில்கடைசி மூன்று பருவங்களில் உள்ள புழுக்களுக்கு இலைகளைத் தண்டோடு அறுவடை செய்து உணவளித்துப் புழு வளர்க்கலாம். தண்டு வளர்ப்பில் 40% வேலையாட்கள் குறைவதற்கு இது சிக்கன வழியாகும். இத்திட்டத்தின் பிற நன்மைகள்,
  • புழுக்களை கையால் தொடுவது குறைவதால் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.
  • புழுக்களும்இலைகளும் புழுக்களின் கழிவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால்இரண்டாம் நிலைத் தொற்று நோய் பரவலைத் தடுக்க முடிகிறது
  • நல்ல சுகாதாரமான சூழல் பராமரிக்கப்படுகிறது
  • இலைகளின் தரம்அறுவடையின் போதும்புழுப்படுக்கையிலும் நன்கு காக்கப்படுகிறது
  • புழுப்படுக்கையில் நல்ல காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது
  • புழுக்கள் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து நன்கு வளர்வதால் தரமான கூடுகள் கிடைக்கின்றன
  • இம்முறையில் செலவுகள் குறைகிறது.
    8. உணவளித்தல்
  •       50-55 நாட்கள் வயதுடைய 3/4 அடி உயரத்தில் உள்ள தண்டுகளை காலையில் குளிர்ச்சியானசமயத்தில் பறித்து புழுக்களுக்கு உணவளிக்க வேண்டும். ஐந்தாம் பருவ புழுக்களுக்கு 60-65 நாட்கள் வயதுடைய தண்டுகளைக் கொடுக்க வேண்டும்.
  •       அறுவடை செய்த தண்டுகளை நிழற்பாங்கான, குளிர்வானஈரப்பதம் உள்ள இடத்தில்சுத்தமானகிருமி நீக்கம் செய்யப்பட்ட கோணிப்பைகளைக் கொண்டு போர்த்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  •       இருவழிச்சந்ததிப் புழுக்களுக்கு, 4 ஆம் பருவத்தில் 460 கிலோவும் 5 ஆம் பருவத்தில் 2880கிலோத் தண்டும் தேவைப்படும்.
  •       தினமும் மூன்று முறை உணவளிக்க வேண்டும் (காலை 6 மணிமதியம் 2 மணிஇரவு 10 மணி)
  •       முற்றிய இலைகளையோ அல்லது மண்ணுடன் உள்ள இலைகளையோ கொடுக்கக்கூடாது
  •       புழுக்களைப் படுக்கையில் சீராக கிடக்கச் செய்யவேண்டும். 100 நோயற்ற முட்டைத் தொகுதிக்கு, 5 ஆம் பருவ கடைசியில் 600 சதுரஅடி இடம் தேவைப்படும். 
  •     ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது, நோய் பரவுவதைத் தடுக்கஎடைகுறைவானபுழுக்களையும்நோய் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய புழுக்களைபற்றுக் குச்சிக்கொண்டு அகற்ற வேண்டும். பொறுக்கிய புழுக்களை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் நீர்த்த சுண்ணாம்பில் போட வேண்டும். 
  9.புழு படுக்கைகளை சுத்தம் செய்தல்
  •   ஏதேனும் நோய்வாய்ப்பட்ட புழுக்கள் தென்பட்டால் அவற்றை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் சுண்ணாம்பு தண்ணீரில் போட வேண்டும்.
  • படுக்கையில் உள்ள கழிவுகளைத் தரையில் போட்டுவிடக்கூடாது.
  • வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க கடைசி பருவ வளர்ப்பிற்கு 260சிமூன்றாம் பருவத்திற்கு250சிநான்காம் பருவத்திற்கு 240சிஐந்தாம் பருவத்திற்கு 240சி வெப்பம் தேவை. ஈரப்பதம் மூன்றாம்பருவத்திற்கு 80 சதவீதமும்நான்கு மற்றும் ஐந்தாம் பருவத்திற்கு 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும்.
  • வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தேவைக்கேற்ப பராமரிக்க வேண்டும். குளிர் சாதன பெட்டிவெப்பக்கருவிகரிஅடுப்புஈரக்கோணிப்பைகொண்டு தேவைக்கேற்ப வெப்பத்தையோகுளிர்ச்சியையோ பெறமுடியும். மேலும் கூரைமீது நீர் தெளித்தும்,ஈரமணல் கொண்டும் பராமரிக்க முடியும். 
  • குறுக்காக காற்றோட்ட வசதி செய்து புழுக்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். 
  11.தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை
  • தோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றி இருக்க வேண்டும்.
  • புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன்படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும்.
  • திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும்அதிவேகமான காற்றையும்அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும்.
  • 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவளிக்க வேண்டும்.   
12.சுகாதாரம் மற்றும் பராமரிப்பு
  • வளர்ப்பு மனைக்குள் செல்வதற்கு முன்புகைகால்களை கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். முதலில் சோப்பு போட்டு கழுவிய பின்பு கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும் (2.5சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்பு கரைசல்)
  • நோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும்படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும்உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமி நாசினிக் கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும்
  • நோய்தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்
  • பட்டுப்புழு வளர்ப்பின் போதுவளர்ப்பு மனையைச் சுத்தமாகவும்,காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும் 
13.புழுப்படுக்கை கிருமிநாசினி பயன்படுத்துதல்
விஜேதாவிஜேதா கிரீன்அங்குஷ் ஆகியவற்றை புழுபடுக்கையில் மற்றும் புழுக்களின் மேல் தூவியும் நோய்களைத் தடுக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். ஒவ்வொரு தோலுரிப்பிற்குப் பின்பும், 5 ஆம் பருவத்தில் 4 ஆம் நாளும் புழுப்படுக்கையின் மீது ஒரு சதுர அடிக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி ஒரே சீராக எல்லா புழுக்களின்மீதும் படும்படி தூவவேண்டும். 
100 (dfl) நோயற்ற முட்டைத் தொகுப்பிற்கான அளவுஅட்டவணை
தூவும் நேரம்
கிருமி நாசினி
கிராம் (ஒரு சதுர அடிபடுக்கைப்பரப்புக்கு)
100அட்டைக்குதேவையான அளவு (கிராம்)
மூன்றாம் தோலுரிப்பிற்கு பின்பும்உணவளிப்பதற்கு முன்பும்
விஜேதா, விஜேதா கிரீன்,அங்குஷ்
5
900
ஆம் பருவத்தின் 3ஆம் நாள்
விஜேதா
3
600
நான்காம் தோலுரிப்பிற்கு பின்புஉணவளிப்பதற்கு முன்பு
விஜேதா,விஜேதா கிரீன்,அங்குஷ்
5
1200
ஐந்தாம் பருவத்தின் இரண்டாம் நாள்
விஜேதா
3
1300
ஐந்தாம் பருவத்தின் நான்காம் நாள்
விஜேதா. விஜேதா கிரீன்,அங்குஷ்
5
3000
ஐந்தாம் பருவத்தின் ஆறாம் நாள்
விஜேதா
3
100


  குறிப்பு
·       மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பூசண நோயைத் தடுக்க விஜேதா கிருமி நாசினி பரிந்துரை செய்யப்படுகிறது.
·        தோலுரிப்பிற்கு செல்லாத புழுக்கள் மீதும் உண்ணக்கூடிய இலைகள் மீதும் தூவக்கூடாது.
·       பவுடர் தூவிய அரைமணி நேரம் கழித்து புழுக்களுக்கு உணவளிக்க வேண்டும்.
     14.முதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்
நல்ல தரமான கூடுகளைப் பெறமுதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில்,தரமான கூடு கட்டும் தட்டுகளில்விடவேண்டும்.
ஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றிஉணவு உண்பதை நிறுத்திகூடு கட்ட இடம் தேடும். கூடு கட்டு தட்டின் அளவை மீறி புழுக்களைத் தட்டியில் விடக்கூடாது.
புழுக்கள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் போது. 240சி வெப்பமும் 60-70சதவீதம் ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை.
100 நோயற்ற முட்டை தொகுப்பிற்கு 35 செட் கூடு கட்டும் தட்டிகள்தேவைப்படும். தொங்கும் தட்டிகளுக்கு தனி அறை அவசியமாகும்.
  15.பட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்
கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்ய வேண்டும். நலிந்தகூடுகளை அகற்ற வேண்டும். பின்பு கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். குளிர் காலத்தில் 1 நாள் தாமதித்து அறுவடை செய்ய வேண்டும்.
  16.விற்பனை
அறுவடை செய்த கூடுகளை குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக்கூடிய நைலான் வலைப்பைகளில்காற்றோட்டமாக நிரப்பிஅறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.
  17.பட்டுப்புழு கூடு மகசூல்
100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக்கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.

No comments:

Post a Comment